ஒட்டன்சத்திரம், ஜூன் 26- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடை யக்கோட்டை அருகே சாலையில் கொட்டிக் கிடக்கும் மணல், ஜல்லிகளால் விபத்து அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை அருகே உள்ள புல்லகவுண்டனூரில் தாடிக்கொம்பு செல்லும் சாலையோரத்தில் கருமலை யில் இருந்து வரும் ஓடையில் தடுப் பணை கட்டும்பணி நடைபெற்று வரு கிறது. இதற்காக சாலையில் எம் சான்ட் மணல் மற்றும் ஜல்லி கற்கல் கொட்டி உள்ளனர். பணி முடிவுற்ற நிலையில் பல நாட்க ளாக தற்போது வரை சாலையிலேயே கொட்டிக் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வரு பவர்களுக்கு எதிரே அதிக முகப்பு வெளிச் சத்துடன் பஸ், லாரி வரும்போது சாலை யோரம் கொட்டப்பட்டுள்ள எம் சான்ட் மணல் மற்றுல் ஜல்லி குவியல்கள் மேல் இரு சக்கர வாகனங்களை விட்டு தடுமாறி லேசான காயங்களுடன் எழுந்து சென்று வருகிறனர். இரு சக்கர வாகனங்களில் வரு பவர்கள் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண் டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பெரும் விபத்து நடந்து உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சாலையேராம் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.