districts

img

குடிநீர் திட்டப் பணிகள், விநியோகம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு

விருதுநகர், ஜூன் 10- விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப்  பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து தமிழக வருவாய் -பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனி வாசன்( விருதுநகர்), ஜி.அசோகன் (சிவ காசி), ரகுராமன்(சாத்தூர்), எஸ்.தங்க பாண்டியன்(இராஜபாளையம்), சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அதில், நகராட்சி பகுதிகளில் நடை பெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்  தும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து நகராட்சிகளுக்கும் நிர்ண யிக்கப்பட்ட அளவுப்படி குடிநீர் சீராக வழங்கப்படுகிறதா எனவும், வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், தடையின்றி மின்சாரம் வழங்குவது பற்றியும், பழுது  ஏற்பட்டால் உடனே சீர் செய்ய நடவ டிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை களை வழங்கினார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பொது நிதியினை பயன்படுத்தி ஆழ்துளை கிணறு அமைத்து கூடுதலாக குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்தினை முறையாக பராமரித்து செயல் படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நடை பெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும்  பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான  குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென வும் தெரிவித்தார்.  இந்த ஆய்வு கூட்டத்தில், நகராட்சி  மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி,  நகர்மன்றத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.