சதுரகிரி கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு
திருவில்லிபுத்தூர், ஜன.3- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 7 ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் மட்டும் மலையேறி சாமி தரி சனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவி லுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ,10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சீனாவில் இருந்து தமி ழகம் வந்த சில நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் கிராமத்தில் தாய் மகள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிவு எட்டப்படவில்லை
மதுரை, ஜன.3- மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது குறித்து மேலூர் கோட்டாட்சியர் அலுவலகம், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மீண்டும் செவ்வாயன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப் படாத நிலை ஏற்பட்டது.
பச்சமலையன்கோட்டையில் ஏலம் ஒத்திவைப்பு
சின்னாளப்பட்டி, ஜன.3- நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சமலை யன்கோட்டை ஊராட்சியில் உள்ள வணிக வளாக ஏலம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பச்சமலையன்கோட்டை ஊராட்சியில் உள்ள வணிக வளாக கடைகளுக்கான ஏலம்,ஐந்தாம் தேதி நடைபெறும் என நாளிதழ்கள் உட்பட அறிவிப்பு வெளி யிடப்பட்டிருந்தது.இந் நிலையில் நிர்வாக காரணங்க ளால் ரத்து செய்யபட்டதால் ஏலம் நடைபெறாது எனவும், ஏலம் குறித்த அறிவிப்பு பின்னர் உரிய அறிவிப்புடன் நடைபெறும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஏலதாரர்கள் ஏலம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ஊராட்சிமன்ற செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
பெரியகுளம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் குவிப்பு
தேனி, ஜன.3- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கெங்கு வார்பட்டியைச் சேர்ந்தவர் வெண்டிமுத்தையா மகன் ஜெக தீஸ்வரன்(27). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் வினோத்குமார் உள்ளிட்டோருடன் ஓட்டணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, கெங்குவார்பட்டி, ராமர்கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் ரிசாத் ராஜ் (24) என்பவர் தனது நண்பர்கள் சிலருடன் அங்கு குளிக்க வந்தார். அங்கு ஜெகதீஸ்வரன், ரிசாத்ராஜ் ஆகிய இரு தரப்பி னரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெகதீஸ்வ ரன், வினோத்குமார் ஆகியோரை ரிசாத்ராஜ் அரி வாளால் வெட்டினர். இதில், ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தி லேயே பலியானார். வினோத்குமார் ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்தனர். ரிசாத்ராஜ், அவரது நண் பர்கள் கிரண், விக்கி ஆகியோரை கைது செய்து விசா ரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து கெங்கு வார்பட்டியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசாத்ராஜ் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் பல் வேறு வழக்குகள் உள்ளன.
சின்னாளப்பட்டியில் அமைச்சர் திடீர் ஆய்வு
சின்னாளப்பட்டி, ஜன.3- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னா ளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2, 8, 9, 10 ஆகிய வார்டு களில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஜனவரி 3 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். விரைவில் நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதியளித்தார். ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், சின்னாளப்பட்டி பேரூ ராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலை வர் ஆனந்தி பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
ஆண்டிபட்டி அருகே கூலி உயர்வு கேட்டு நெசவாளர்கள் 2 ஆவது நாள் வேலைநிறுத்தம்
தேனி, ஜன.3- கூலி உயர்வு கேட்டு டி. சுப்புலாபுரம் பகுதி விசைத் தறி தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள 30 விசைத்தறிக்கூடங் கள் மூலம் காட்டன் ரக சேலைகள் மற்றும் பேன்சி ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ம் ஆண்டு டிசம்பர் வரை விசைத்தறிக்கூட உரி மையாளர்கள் மூலம் இரண் டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர் களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31-ல் முடிவடைந்தது.இந் நிலையில் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் போடப்பட வில்லை. இதனால் கால வரையற்ற வேலை நிறுத்தத் தில் விசைத்தறி தொழிலா ளர்கள் திங்கள் முதல் ஈடு பட்டு வருகின்றனர். இரண் டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர் வாதால் விசைத்தறி கூடங் கள் இயங்காமல் வெறிசோடி காணப்படுகிறது. 50 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலி யுறுத்தி விசைத்தறி தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இந்த போராட்டம் கார ணமாக இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதைச்சார்ந்த நூல்கண்டு தயாரிப்பது பாவு தயாரிப் பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத னால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் உரிமையா ளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல நெசவு தொழி லாளர்களின் வருவாயும் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது.
வைகையில் தண்ணீர் திறப்பு 4969 கன அடியாக அதிகரிப்பு
தேனி, ஜன.3- வைகை அணையிலிருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறப்பு 4969 கன அடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆம் கட்ட பூர்வீக பாசனத்திற்காக கடந்த மாதம் 29 ஆம் தேதி 2500 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு திங்கள் கிழமை முதல் அணையிலிருந்து கூடு தலாக 3200 கனஅடி நீர் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை மேலும் கூடுதலாக 1700 கனஅடி சேர்த்து 4969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் 60.33 அடி யாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 613 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 3666 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரை யோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக செல்லும் இடங்களில் பொது மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வரு கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமும் 142 அடியில் இருந்து படிப்படி யாக குறைந்து தற்போது 140.50 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றி லும் நின்றதால் நீர்வரத்து 279 கனஅடி யாக உள்ளது. அணையிலிருந்து 511 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7261 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி, வரத்து 57 கனஅடி, திறப்பு 30 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.64 அடி, வரத்து 21 கனஅடி, திறப்பு 27 கன அடியாக உள்ளது.
இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு: மதுரை ஆட்சியர் தகவல்
மதுரை, ஜன.3- தமிழர்த்திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகை யில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1000- ரொக்கப் பணம் அனைத்து நியாய விலைக்கடை களிலும் வழங்க தமிழக அரசால் ஆணை கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் விநியோகம் 09.01.2023 முதல் தொடங்கப்படவுள்ளது. நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரி சலைத் தவிர்க்கும்பொருட்டு குடும்ப அட்டைகளின் அடிப்படையில் தெரு வாரியாக சுழற்சிமுறையில் நாளொன் றுக்கு கிராம புறங்களில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கும், நகர்புறங்களில் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர் களுக்கும் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது. அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் 03.01.2023 முதல் 8.1.2023- ஆம் (06.01.2023 நீங்கலாக) தேதிவரையில் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் அலுவலகத்தில் அமைந் துள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.0452-2546127 என்ற எண்ணிற்கு அலுவலக வேலை நாளில் வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு புகார்கள் அளிக்கலாம். அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமி ழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் நெரிசலை தவிர்த்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று தங்க ளுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி மையம் இடமாற்றத்திற்கு வாலிபர் சங்கம் எதிர்ப்பு
திண்டுக்கல், ஜன.3- சோளகுளத்துபட்டி அங்கன்வாடி மையம் இட மாற்றம் செய்ததற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சங்கத் தின் மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட் டத்தலைவர் சிலம்பரசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாணார்பட்டியில் உள்ள சோளகுளத்துப்பட்டியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தை கள் பக்கத்து கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத் திற்கு சென்று வந்தார்கள். சமீபத்தில் சோள குளத்துப்பட்டியில் மாவட்ட நிர்வாகத்தால் அங்கன்வாடி மையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. கட்டு மானப்பணிக்காக செங்கல், ஜல்லிகள் கொண்டு வந்தனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. அருகில் உள்ள கிழவன் குளம், எல்லைப்பட்டிக்கு இந்த அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டுள்ளது. சோளகுளத்துப்பட்டி யிலுள்ள குழந்தைகள் ஏற்கனவே பக்கத்து ஊரில் உள்ள மையத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்து வரு கிறது. கிராமப்பகுதியில் சிரமம் என்னவென்றால் இந்த குழந்தைகளின் பெற்றோர் வேலைக்கு செல்ல இய லாத நிலை உள்ளது. எனவே இடமாற்றம் செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் சோளகுளத்துப்பட்டி யில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில்
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மதுரை, ஜன.3- செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில், எர்ணாகுளம் - வேளாங் கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிக் கப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. செகந்திராபாத் - இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள் ளது. அதன்படி செகந்திராபாத் இராம நாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) ஜனவரி 4 முதல் ஜனவரி 25 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) ஜனவரி 6 முதல் ஜனவரி 27 வரை வெள்ளிக்கிழமைகளில் இராம நாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண் டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர்,
திருத் துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக் குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 குளிர்சாதன இரண்ட டுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக் கோட்டை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே தற்போது ஒரு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக ஜனவரி 15 வரை நீட் டிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணா குளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) ஜனவரி 7, 14 ஆகிய சனிக்கிழமைகளில் எர்ணா குளத்தில் இருந்து மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 8, 15 ஆகிய ஞாயிற் றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 06.40 மணிக்கு புறப் பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 4) காலை 8 மணிக்கு துவங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து பலி
இளைஞர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்கிடுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
இராஜபாளையம், ஜன.3- இராஜபாளையம் சஞ்சீவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்இருளப்பன் (32) என்பவர் துணிக்கடை ஒன்றில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது இராஜபாளையம் டி.பி. மில் சாலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீருக்காகக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார். இந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இராஜபாளையம் நகர் செயலாளர் பி.மாரியப்பன் விடுத்துள்ள அறிக்கை: தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிறது. டெண்டர் காலம் நிறைவடைந்தும் பணிகள் முடிவடையவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இது தொடர்பாக 2020-ஆம் ஆண்டு ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும் நடவடிக்கை இல்லை. இந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் பலர் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். தோண்டப்பட்ட குழிகளில் எச்சரிக்கைப் பலகையோ, தடுப்பு சாதனங்களும் வைக்கவில்லை. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தாத ஒப்பந்த நிறுவனம் மீதும், துறை அதிகாரிகள் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியான பொன் இருளப்பன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ரூ.3.80 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஸ்டார் நிறுவனத்திற்கு உத்தரவு
தேனி, ஜன.3- ரூ.3.80 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராம மூர்த்தி. இவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ஆவார். கடந்த 2019 ஆம் ஆண்டு டாக்டர் ராமமூர்த்தி கொரோனா நோய் தொற் றால் பாதிக்கப்பட்டு அதற் காக தனியார் மருத்துவ மனையில் ரூ.6 லட்சம் வரை செலவு செய்து சிகிச்சை பெற்றார். இவர் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறு வனத்தில் ரூ.5 லட்சத்திற்கு பிரிமியம் தொகை செலுத்தி யுள்ளார். ஆனால் இவ ருக்கு ஸ்டார் ஹெல்த் நிறு வனம் ரூ.2 லட்சம் மட்டுமே கொடுத்தது. மீதி தொகை யை வழங்குமாறு தொடர்ந்து காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டு வந்தார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் கொடுக்க மறுத்துவிட்டது. இதையடுத்து டாக்டர் ராமமூர்த்தி தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், டாக்டர் ராமமூர்த்திக்கு மீதி தொகை யான ரூ. 3 லட்சம் மற்றும் சேவை குறைபாட்டிற்கான ரூ.50 ஆயிரம், செலவு தொகையாக ரூ. 30 ஆயிரம் சேர்த்து,ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொடுக்க வேண் டும் என்று உத்தரவிட்டது.