districts

img

மாநில அளவிலான அக்குபங்சர் கவுன்சிலை உருவாக்க முதல்வருக்கு கோரிக்கை

தேனி, ஜூன் 4- மாநில அளவிலான அக்குபங்சர் கவுன்சிலை உருவாக்க வேண்டும் என்று  முதலமைச்சருக்கு அக்கு பங்சர் சிகிச்சையாளர் சங் கங்களின் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் கோரிக்கை விடுத்துள்ளது. அக்குபங்சர் சிகிச்சை யாளர் சங்கங்களின் கூட்ட மைப்பின் (FAPA) கல்ந்தாய்  வுக் கூட்டம் சென்னையில் சேத்துப்பட்டு உலக பல்க லைக்கழக சேவை மைய அரங்கில் நடைபெற்றது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பதி னேழு அக்குபங்சர் சிகிச்சை யாளர் சங்கங்களின் நிர்வாகி கள் 41 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இயங்கும் அக்குபங்சர் அமைப்புகளில் பெரும் பாலானவை கூடுவது இதுவே முதல்முறை.  கூட்டமைப்பின் தலைவ ராக சபீர் அப்துல்லா, செய லாளராக போஸ் முகமது மீரா, பொருளாளராக அப்  துல் நாசர் ஆகியோர் உள்  ளிட்ட நிர்வாகிகள் தேர்வை யும், அமைப்பிற்கு ஒருவர் என்ற அடிப்படையில் 17  பேரைக் கொண்ட செயற் குழுத் தேர்வையும் கூட்டம்  அங்கீகரித்தது. கூட்ட மைப்பினை உடனடியாக தமிழ்நாடு அரசின் சங்கப்  பதிவுச் சட்டத்தின் கீழ்  பதிவு செய்யும் நடவடிக்கை களைத் துவங்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு சங்கத்தி லும் உறுப்பினராக இருக்  கும் அக்குபங்சர் சிகிச்சை யாளர்களுக்கான பொது வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது, சட்ட ரீதி யாக அக்குபங்சர் சிகிச் சைக்கான உரிமையை நிலு வையில் இருக்கும் வழக்கு களின் மூலம் நீதிமன்றங்க ளில் நிலைநாட்டுவது, மாநில அளவிலான அக்குபங்சர் கவுன்சிலை உருவாக்கும் கோரிக்கையோடு முதல மைச்சர், மருத்துவத் துறை அமைச்சர், மருத்துவத் துறைச் செயலாளர் ஆகி யோரைச் சந்திப்பது, 2019 ஆம் ஆண்டில் ஒன்றிய அர சால் அமைக்கப்பட்ட அக்கு பங்சர் அங்கீகாரத்திற்கான அபெக்ஸ் கமிட்டியின் முடி வைப் பெற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தமிழ்நாட்டில் இயங்கும்  கூட்டமைப்பில் இன்னும்  இணையாத அனைத்து அக்குபங்சர் சங்கங்க ளுக்கும் அழைப்பு விடுப்பது  என்றும்  முடிவு செய்யப்பட் டது.