கடமலைக்குண்டு, ஜுன் 11- தேனி மாவட்டம் ,கட மலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்ப ளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் தமிழ்நாடு மட்டு மல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கு ஏற்றுமதி செய் யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் தொடர் கனமழை பெய்த தால் தற்போது தென்னை மரங்களில் தேங்காய் உற் பத்தி அதிகரித்து காணப்படு கிறது. அதன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை 1 தேங்காய் 11 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலை யில் தற்போது 8 ரூபாய் வரை மட்டுமே விற்பனையா கிறது. இருப்பினும் உற்பத்தி அதிகரித்து காணப்படுவ தால் விலை குறைவால் விவ சாயிகளுக்கு பெரிய அள வில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் விலை மேலும் குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய் யப்படுவதும் விலை குறை விற்கு காரணம் எனவும் தெரி வித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேங் காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே தென்னை விவ சாயிகள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.