மதுரை, நவ 8- புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்க ளில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார் பில் மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் க.நீதிராஜா விளக்கிப் பேசினார். மாநில பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் மு. ராம்தாஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர் வாகிகள் பெ.சந்திரபாண்டி , ஜெ. மகேந்திரன், தூ.முருகன், த.மனோ கரன், மாவட்டத் துணைத்தலை வர்கள் ஆ.பரமசிவன், ஆ.அமுதா, சி.பெரியகருப்பன், க.சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேனி
தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் பெ.பேயத்தேவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாஜுதீன் விளக்கிப் பேசினார். பேரூராட்சி ஊழியர் சங்க தலைவர் சுந்தரம், பிற் பட்டோர் நலத்துறை ஊழியர் சங்க தலைவர் பொ.அழகுராஜா, சாலை பணியாளர் சங்க தலைவர் முத் தையா, பொது சுகாதாரத்துறை சங்க தலைவர் ராஜேந்திரன், சத்து ணவு ஊழியர் சங்க செயலாளர் பவானி, மருத்துவத்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் பொ.கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.பாண்டி, மாவட்டப் பொருளாளர் ஆர்.மாரி, மருத்துவத்துறை நிர் வாக துறை அலுவலர் மாநில துணைத்தலைவர் மூவேந்திரன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயப்பிர காஷ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி ரன், அரசு சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் முத்துக்குமார், நெடுஞ்சாலை சாலைப் பணியாளர் சங்க மாவட் டச் செயலாளர் சின்னப்பன், மின் வாரிய கூட்டமைப்பு மாநிலச் செய லாளர் உமாநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் விவேகானந்தன், மாவட்டப் பொரு ளாளர் குப்புசாமி, சத்துணவு ஊழி யர் சங்க மாநில செயலாளர் ஜெசி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநி லத் தலைவர் முருகானந்தம், வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் பாஸ் டின் டல்ல, சாலை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ மாணிக்கம் ஆகியோர் பேசினர்.