districts

img

5 கண்மாய்களில் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக!

சிவகங்கை, ஜூன் 11- சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் குறுந்தம்பட்டு இரண்டு கண்மாய்கள் உள்பட ஐந்து கண்மாய்களுக்கான தண்ணீர் வரும்  வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது.இதனை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் குருந்தம்பட்டு யூனியன் பாசனகண்மாய், சேந்தினி கண்மாய், பெருங்கரை கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகினிலே ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கண்மாயின் வரத்து கால்வாய் கள்ளுக்கால் ஊன்றி கம்பி வலை போட்டு, விவசாயத்தை பாதிக்கின்ற வகை யில் இடையில் ரோட்டையும் போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது . உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வரத்து கால்வாயை ஆய்வு செய்து, கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் .மேலும்  விவசாயிகளை பாதுகாப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேந்தனி, பெருங்கரை கண்மாய் ஆகிய இரண்டு கண்மாய் மடைகளும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கண்மாய் மடைகளை பழுது நீக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பாசன விவசாயி கள் உள்ளிட்டோர் ஆக்கிரமித்துள்ள பகுதியை நேரில் பார்வையிட்டனர்.