districts

இராஜபாளையம் நீர்நிலை புறம்போக்கில் கட்டடங்கள் அகற்றம்

இராஜபாளையம், ஜூன் 20- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் நகராட்சியின் 12 வது வார்டுக்கு உட்பட்டது அண்ணா நகர். இப்பகுதியில் அமைந்துள்ள கொண்டநேரி கண்மா யின் நீர் நிலை புறம்போக்கு இடங்கள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகளாக வும், கட்டடங்களாகவும், நாய் பண்ணை  உள்ளிட்ட வியாபாரத்திற்கும் பயன்படுத் தப்பட்டு வந்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த வருடம் இப்பகுதியில் இருந்த ஒரு  சில கட்டடங்கள் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டன.. நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு போதுமான கால அவகாசம் கொடுக்கப் பட்டிருந்தது. 20 நாட்களுக்கு மேலாகியும் ஆக்கிர மித்து கட்டப்பட்டிருந்த வீடுகளில் குடி யிருந்தவர்கள் வீட்டை காலி செய்ய வில்லை. அகற்ற வந்த அதிகாரிகளை பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்குள் உள்ளே நுழைய விடா மல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசியும் போராட் டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  அதன் பின்னர் மூன்று ஜேசிபி வாக னங்கள் கொண்டு  கண்மாய் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.