தேனி, டிச.29- சிவகங்கை, இராமநாத புரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையிலிருந்து 2500 கன அடி தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட் டம் தற்போது 64 அடியாக உள்ளது. வைகை அணை யில் இருந்து மதுரை, திண் டுக்கல் மாவட்ட பாசனத்திற் காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை யை ஏற்று வைகை அணை யில் இருந்து ஒரு வாரத்திற்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க பொதுப் பணித்துறை யினருக்கு அரசு உத்தரவிட்டது. மொத் தமாக 1533 மில்லியன் கன அடி தண்ணீரை 7 நாட்களில் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து வியாழ னன்று காலை வைகை அணையில் இருந்து வினா டிக்கு 2500 கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை யில் போதுமான அளவு பெய் யாத காரணத்தால் நீர்நிலை களுக்கான நீர்வரத்து குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக வைகை அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்ய வில்லை. இதனால் வைகை அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந் நிலையில் தற்போது கூடுத லாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.