districts

மதுரை முக்கிய செய்திகள்

விபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பலி 

தேனி, ஏப்.22-  போடி வட்டார வளர்ச்சி அலுவலர் விபத்தில் பலி யானார். தேனி மாவட்டம், போடி வட்டார வளர்ச்சி அலுவலர்  ஞானதிருப்பதி(54). இவர் கடந்த 12 ஆம் தேதியன்று தேனி யில் இருந்து அரசு ஜீப்பில் போடிக்குச் சென்று கொண்டி ருந்தார். தோப்புப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர்லாரி ஜீப் மீது மோதியது.இதில் ஜீப் ஓட்டுநர் முகமது ஷெரீப் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பலத்தக்காயமடைந்த ஞானதிருப்பதிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மதுரை தனியார்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர். சிபிஎம் அஞ்சலி அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி. முருகன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே. பாண்டியன்,விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, தேனி தாலுகா செயலா ளர் இ.தர்மர், அரசு ஊழியர் சங்க தலைவர் பேயத்தேவன், ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.ராம மூர்த்தி, மாவட்ட தலைவர் கே.துரைராஜ் ஆகியோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிவகாசி அருகே அலுமினிய ஆலையில் தீ விபத்து

சிவகாசி, ஏப்.22- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான அலுமினிய ஆலை உள்ளது. இதில், பட்டாசு ஆலைக்கு தேவையான அலுமினிய பொடிகள் தயார் செய்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சனிக்கிழமை மாலை திடீரென இப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசான  மழை பெய்தது. அப்போது, அலுமினிய பொருட்கள் இருந்த அறையில் திடீரென தீப்பற்றியது. இதை யடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீய ணைப்புத்தறையினர், தீ மேலும் பரவவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

தேனி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட வாலிபர் மாயம் 

தேனி, ஏப்.22-  தேனி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட வாலிபர் மாயமானது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் ராஜபிரபு. இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த செண்பகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து  வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சனை  ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தேனி அனைத்து மக ளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருதரப்பி னரும் சீர்வரிசை பொருட்களை திரும்ப பெற்றுக் கொண்  டார். மேலும் நீதிமன்றத்தில்  விவாகரத்து கேட்டு மனு  அளித்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்  செண்பகா மீண்டும் தேனி அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில்  புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணைக்கு  சென்ற ராஜபிரபு அதன்பின்னர் மிகுந்த மன உளைச்சலு டன் காணப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 23 ஆம்  தேதி முதல் காணவில்லை . இதுகுறித்து ராஜபிரபு வின் தாயார் அமுதா  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம்  புகார் அளித்தார் .அதன் பேரில்  வீரபாண்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜபிரபுவை தேடி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகள் மூலம் டெண்டர் சமர்ப்பித்த ஒப்பந்ததாரர்கள்

சிஏஜி அறிக்கையில் தகவல்

சென்னை, ஏப்.22- கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 2016 முதல் 2021 வரையிலான செயல்பாடுகள் குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை (சிஏஜி) தலைவரின் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் டெண்டரை சமர்ப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஒப்பந்ததாரர்களால் ஏலம் சமர்ப்பிக்கப்பட்ட கணினியின் அடையாள முகவரியையும், துறை சார்ந்த பயனர்களின் அடையாள முகவரியையும் தரவுத் தளம் கைப்பற்றியது. ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள முகவரி மற்றும் துறை பயனர்களுடன் அடையாள முகவரியுடன் ஒப்பிடுகையில், ஒப்பந்ததாரர்கள் தங்களின் ஏலங்களை சமர்ப்பிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது. 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸ்ட் வரை 214 ஒப்பந்தப் புள்ளி அறிவிப்புகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, 87 ஒப்பந்ததாரர்கள் துறை அதிகாரிகளின் 57 கணினிகளைப் பயன்படுத்தி 289 ஏல ஒப்பந்தங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 71 ஏலங்கள் எல் 1 ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்டன. ஏலதாரர்கள், துறை சார் கணினிகளின் வாயிலாக ஏலங்களை சமர்ப்பித்தன் மூலம் ஒப்பந்தப் புள்ளி நெறிமுறைகளை மீறியதையும், அதிகபட்ச போட்டி ஏலத்தை பெற வேண்டும் என்ற துறையின் முயற்சியும் நிறைவேறவில்லை. மே 2022 இறுதி கலந்தாய்வின் போது முதன்மைச் செயலாளர் இதைப் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். அரசு இதை ஏற்றுக்கொண்டு ஆகஸ்ட் 2022இல் இதுபோன்ற தவறுகளை ஆய்வு செய்து, இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஒப்பந்தப் புள்ளி அழைக்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கூறியது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.