districts

img

சோழவந்தான் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ஊரணி நிலம் மீட்பு

மதுரை, மே 13- மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே விக்கிரமங் கலம் ஊராட்சிக்குட்பட்ட வையத்தான் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான ஊரணி உள்ளது .இப்பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும்  விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி  வந்த 4 ஏக்கர் 55 செண்ட் பரப்ப ளவில் இருந்த ஊரணியின் நீர்பிடிப்பு பகுதிகளை பல ஆண்டுகளாக தனிநபர் ஒரு வர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை வாழை மற்றும் நெல் உள்ளிட்டவை பயிரிட்டு வந்துள்ளார். ஊரணி பகுதி யை ஆக்கிரமித்ததால் நிலத் தடி நீர்மட்டம் குறைந்தது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி  ஊரணி நீர்பிடிப்பு நிலத்தை மீட்கக்கோரி இக்கிராம மக் கள் மாவட்ட நிர்வாகம் மற்  றும் வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மனு கொடுத்தும்  நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கிராம பொதுமக்கள் சார்பில் மே 16 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. இதையடுத்து  செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி (கி.வ)அலுவலர் கீதா, தாசில்தார் கோமதி, வருவாய் ஆ.ய்வாளர் உமா தேவி, கிராம நிர்வாக அலு வலர் முத்துமணி, ஊராட்சி  தலைவர் கலியுகநாதன், செயலர் பால்பாண்டி ஆகி யோர் ஆக்கிரமிப்பு ஊரணி யை அளவிடும் பணியை மேற்கொண்டு, காவல் ஆய்  வாளர் சிவசக்தி தலைமை யில் சார்பு ஆய்வாளர் வெற்றி வேல் மற்றும் காவல்துறை யினர் பாதுகாப்போடு ஆக்கி ரமிப்பு இடத்தில் இருந்த தென்னை, வாழை மற்றும் நெல் பயிர்களை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அகற்றி ஊரணி நீர்பிடிப்பு நிலத்தை மீட்டனர். அப் போது ஆக்கிரமிப்பாளர் மாயாண்டி மகன் அர்ஜுனன் என்பவர் உடலில் மண் ணெண்ணெய்யை ஊ ற்றி தீ வைக்க முயன்றார். பாது காப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து தண்ணீர் ஊற்றினர்.