districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையறையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு: இடம்: எலைட் மாஸ்டர் மஹால், தேனி ரோடு,  நாகமலை புதுக்கோட்டை,மதுரை. ஆகஸ்ட் 18, மாலை 4 மணி. பங்கேற்பு: சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன், கு.வெங்கடேசன், எஸ்.ரமேஷ், ச.சபரி, மு.சுப்பிர மணியன், க.ரா.சந்திரசேகரன் மற்றும் தலைவர்கள்.

இராமநாதபுரம் இன்று மீனவர்களுக்கு நலத்திட்ட  உதவிகளை முதல்வர் வழங்குகிறார்

இராமநாதபுரம், ஆக.17- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இன்று தமிழ்  நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில்  பங்கேற்று மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார்.  இவ்விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறையின் மூலம் 4184 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ரூ.24,26,28,315- மதிப்பீட்டிலும், மீன்  வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 1299 பய னாளிகளுக்கு மானியத்தில் சூரை மீன்படகு கட்டுதல், கிசான் கடன் அட்டை, கடற்பாசி வளர்ப்பு, மீனவர் நல  வாரிய அட்டை(SMART CARD) ரூ.9,92,80,294- மதிப்பீட்டி லும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின்  மூலம் 1 பயனாளிகளுக்கு புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.30,98,000- மதிப்  பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் மூலம் 1152 பயனாளி களுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் கே.சி.சி கடற்பாசி  வளர்ப்பு கடன் ரூ.5,43,75,000- மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம்  துறையின் மூலம் 6608 பயனாளிகளுக்கு கூட்டுப் பொறுப்பு  குழுக்கடன் மகளிர் சுய உதவிக் குழு கடன், துயர் குறைப்பு  நிதி ரூ.30,82,51,000- மதிப்பீட்டிலும் என மொத்தம் 13,244  பயனாளிகளுக்கு ரூ.70,76,32,609- மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார் என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வீட்டை அபகரித்து கொலை மிரட்டல்  விடுத்த கும்பல் மீது வழக்கு பதிவு

மதுரை, ஆக.17-  சென்னையை சேர்ந்தவர் சுபாஷ் இவர்  2011 ஆம் ஆண்டில் மதுரை கே.புதூர் பகுதியில் ராமதிலகம் என்பவ  ருக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங் கினார். கட்டிடம் இடியும் நிலையில் இருந்ததால் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக மாநக ராட்சியில் விண்ணப்பித்தார். மின் வாரிய அலுவலர்களும்  கட்டிடத்தை ஆய்வு செய்து மின் இணைப்பை துண்டித்த னர். பின்னர் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. இதே பகுதியைச் சேர்ந்த சிலர்  வீட்டிற்குள் தங்கியுள்ள னர். இதுகுறித்து தகவல் அறிந்து சுபாஷ், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். இவரது வீட்டை அப கரிக்கும் நோக்கில் போலியான ஆவணங் களை தயார்  செய்து சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இது குறித்து சுபாஷ் கே.புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளிர் உரிமை திட்டத்தில்  விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு 

தேனி, ஆக.17- தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திற னாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்க ளில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதி களில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய  மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக 259 மையங்களில் நடைபெற்றது இதில் 1,50,517 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாம் கட்டமாக 258 மையங்க ளில் நடைபெற்ற முகாமில் 1,33,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்  களில் விண்ணப்பிக்காதவர்கள் மேற்குறிப்பிட்ட 3 தினங்களில் தேனி மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட அனைத்து முகாம்களிலும் மீண்டும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விண்ணப் பித்துக் கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில்  துணை கண்காணிப்புக்குழு ஆய்வு

தேனி, ஆக.17- முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள  ஆணைய செயற்பொறியா ளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு வினர் வியாழனன்று ஆய்வு  செய்தனர். பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் கண்கா ணிப்புக்குழுவை நியமித்தது. தற்பொழுது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறி யாளர் விஜயசரண் உள் ளார். இக்குழுவிற்கு உதவி யாக துணை கண்காணிப்புக்  குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது  கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்  பொறியாளர் சதீஷ் உள் ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்  இர்வின், உதவி செயற் பொறியாளர் குமார், கேரள  பிரதிநிதிகளாக கட்டப் பணை நீர்ப்பாசன செயற் பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருண் ஆகியோர் உள்ளனர். இக்குழு வியாழனன்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.05 அடியாக இருந்த நிலையில், அணை யில் செய்துவரும் வழக்கப்  பணிகளையும், செய்யப்பட வேண்டிய பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். முன்னதாக குழு தலை வர் மற்றும் தமிழக அதிகாரி கள் தேக்கடி படகுத்துறை வழியாக தமிழக பொதுப்  பணித்துறைக்கு சொந்த மான கண்ணகி படகில் அணைக்கு சென்றனர். கேரள அதிகாரிகள் வல்லக்  கடவு வனப்பாதை வழி யாக அணைக்குச் சென்ற னர். அங்கு பெரியாறு அணையின் மெயின் அணை, பேபி அணை, மண்  அணை, கேலரி பகுதி, அணையின் சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து  குழுவினர் ஆய்வு செய்தனர்.  பின்னர் மாலையில் மாலை துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.

நத்தம் பேருந்து நிலையத்தில்  இடிந்து விழுந்த மேற்கூரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்  பேருந்து நிலையத்தில் பேரூ ராட்சிக்கு சொந்தமான பல்வேறு வணிக வளாக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் செவ்வா யன்று பழைய பேருந்து நிலை யத்திற்குள் மொபைல் கடைகள் செயல்பட்டு வரும் பகுதியில் மேற்  கூரை திடீரென்று இடிந்து விழுந் தது. இதில், அந்த வழியாக சென்ற  குடகிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகர்சாமிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்  டது. கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்  றும் கடைக்காரர்கள் வலியுறுத்தினர்.

கிராமசபை கூட்டத்தில் பத்திரிகையாளர்களை   தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்

இராஜபாளையம், ஆக.17- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சாமிநாதபுரம் கிராமம். இங்கு  எம்.ஜி.ஆர் காலனியில் அருந்ததிய மக்கள் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வில்லை என அப்பகுதி மக்கள் பலமுறை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இந்நிலையில், சுதந்திர தின கிராம சபை கூட்டத்திற்கு  அருந்ததிய மக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி அப்பகுதி இளைஞர்கள் வாயில் கருப்பு துணி யை கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் அவரது தகப்ப னார் முருகன் ஆகியோர் இளைஞர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இவருக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற செயலாளர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற  தலைவரின் ஆதரவாளர்கள், இளைஞர்களை தாக்க முயன்றனர். இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையா ளர்களையும் தாக்கி செல்போன்களை பறிமுதல் செய்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற னர். இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வா ளர் சார்லஸ் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். மேலும் இளைஞர்கள், பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.