districts

மதுரை முக்கிய செய்திகள்

நின்று போன பாசஞ்சர் ரயிலை இயக்க மறுக்கும் ரயில்வே

இராமேஸ்வரம், மே 9- கொரோனா காலத்தில் நிறுத்தப் பட்ட மதுரை-இராமேஸ்வரம் பாசஞ்சர் (காலை, மாலை) மற்றும் கன்னியாகுமரி -இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்க வேண்டும். இராமேஸ்வ ரம் வந்து செல்லும் அஜ்மீர், அயோத் தியா, பனாரஸ், செகந்திராபாத் எக்ஸ் பிரஸ் இராமநாதபுரம், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல  வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை இராமநாதபுரத்தில் ரயில்வே அதிகாரி களைச் சந்தித்து மனு அளித்துள்ளார். கோரிக்கையை நிறைவேறவில்லை எனில் வரும் ஞாயிறன்று ரயில் மறியல்  போராட்டம் நடைபெறுமென அறிவிக் கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஓய்வூதியம்  கேட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மே 9- சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்தினர். தர்மலிங்கம், மாவட்டச் செயலாளர் எஸ்.செல்வராஜ், ஜே.எஸ்.விஜயகுமார், சக்திவேல், ஆறு முகம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முருங்கை விலை  கடும் வீழ்ச்சி 

திண்டுக்கல், மே 9- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ளது கூம்பூர். இங்கு அதிக  அளவில் முருங்கைக் காய் விளை கிறது. இங்கிருந்து ஆந்திரா, மகா ராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.  தற்போது வெளிமாநில வியாபாரி கள் கொள்முதல் செய்யாத கார ணத்தால் உள்ளூர் சந்தையில் விற்க வேண்டியுள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கிலோ ரூ.60-க்கு விலை போகிறது. ஆனால் திண்டுக்கல் மொத்த  மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.

மதுரையில்  முதியவர் கொலை

மதுரை, மே 9- மதுரை சின்னசொக்கிகுளம் கமலா  2-ஆவது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ்-பங்கஜவள்ளி தம்பதியினர். இவர்கள் கண்மணி என்ற வளர்ப்பு மகளு டன் வசித்து வந்தனர். இந்நிலையில், கண்மணி தனது கணவர் ஹரிஹரனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  இந்நிலையில், திங்களன்று வீட்டில் இருந்த முதியவர் கிருஷ்ணாராவ் (74), வீட்டில் அறையில் தூங்கிக் கொண்டி ருந்த நிலையில் கதவை திறந்து பார்த்த போது அடையாளம் தெரியாத நபர்  களால் வெட்டி படுகொலை செய்யப் பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து மனைவி பங்கஜ வள்ளி தல்லாகுளம் காவல்துறையின ருக்கு அளித்த தகவலையடுத்து காவல்  துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக தம்பதிகளின் வளர்ப்பு மகள் மற்றும் மருமகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும் சிசிடிவி  காட்சிகளை கைப்பற்றி காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.

ஆலோசனை கூட்டம்

நத்தம், மே 9- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்  ணன் தலைமை தாங்கினார். துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ வன் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டு, 2019-20 ஆம் ஆண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பாரத பிரதமர் குடியிருப்பு கள், கட்டி முடிக்கப்படாத வீடுகள் இருப்  பின் அவற்றை கட்டி முடிக்க, ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை மேற்  கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

கடையில் கொள்ளை

மதுரை, மே 9- மதுரை மாவட்டம் மேலூர் செக்  போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஜெய பாண்டி என்பவர் வீட்டு கட்டுமான பொருட்கள் கடை வைத்துள்ளார். ஞாயி றன்று இரவு கடையைப் பூட்டிவிட்டு சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர் கடையிலிருந்த் ரூ.4,500-ஐ எடுத்துக்கொண்டு. ரூ.9 ஆயிரம் மதிப்பி லான கட்டுமான பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுவிட்டார். கடையின் உரிமையாளர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

செங்கல் சூளைக்கு மண் தருவதில்  குவாரி உரிமையாளர் கட்டுப்பாடு

தேனி ஆட்சியரிடம் புகார்

தேனி, மே 9- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செங்கல் சூளைக்கு மண் தருவதில் குவாரி உரிமையாளர் கட்டுப்பாடு விதிப்பதால் வேலையின்றி வறுமையில் வாடுவதாக நாட்டு செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தேனி ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி ஆட்சியரிடம், நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன் கொடுத்த மனு வில் தெரிவித்துள்ளதாவது:  ஆண்டிபட்டி வட்டம், கன்னியப்ப பிள்ளைபட்டி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் 600-க்கும் மேற்பட்ட செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். சூளைக்கு தேவை யான மண், அருகில் உள்ள ஜக்கம்மாள்பட்டி யில் கனிம வளத்துறையின் மூலம் அனுமதி பெற்ற மண் குவாரி மூலம் எடுத்து வருகி றோம். தற்போது குவாரி உரிமையாளர், அவர்கள் வைத்துள்ள டிராக்டர் மூலம் மட்டுமே மண் தரமுடியும் என சொல்வதால், எங்களிடம் உள்ள டிராக்டர் அதனை நம்பி யுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டிராக்டர் வாடகைக்கு கூடுதல் செலவு ஆகிறது .அனுமதி பெற்று மண் அள்ளுபவர், மண்ணை பக்கத்து மாவட்டங்களுக்கு விதி யை மீறி இரவு பகலாக கொண்டு செல்கி றார்.  மண் கொடுத்தாக நிலையில் வேலை யிழப்பு, வறுமையில் வாடும் நிலை ஏற்படு கிறது. எனவே தேவையான மண், அரசு நிர்ண யித்துள்ள கட்டணப்படி, அவரவர் வாக னங்களில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். 

மதுக்கூடத்தை அகற்றக் கோரி  சிபிஎம் கையெழுத்து இயக்கம்

சிவகங்கை, மே 9- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலி ருந்து மடப்புரம் காளி கோயிலுக்குச் செல் லும் வழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் மதுக்கூடத்தை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்  கிழமை பொதுமக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. திருப்புவனத்திலிருந்து 5 கி.மீ. தொலை வில் மடப்புரம் காளி கோயில் அமைந்துள்  ளது. திருப்புவனத்திலிருந்து இக்கோயி லுக்குச் செல்லும் வழியில் பள்ளி வளாகம் அருகில் மதுபாட்டில்கள் விற்பனையுடன் தனியார் மதுக்கூடம் திறக்கப்பட்டு செயல்  பட்டு வருகிறது. இந்த மதுக்கூடத்துக்கு வரும் மதுப் பிரி யர்களால், மடப்புரம் காளி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும், பள்ளிக்குச் செல்  லும் மாணவ, மாணவிகளுக்கும் அச்சுறுத் தல் இருப்பதால் மதுக்கூடத்தை அகற்றக் கோரி, திருப்புவனம் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மதுக்கூடத்தை அகற்  றக் கோரி, திருப்புவனம் பகுதி பொதுமக்க ளிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது. கையெழுத்து இயக்கத்தில் திருப்பு வனம் ஒன்றியச் செயலாளர் அய்யம் பாண்டி, சக்திவேல், நகர் செயலாளர் ஈஸ்வ ரன், ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்து படிவத்தை, திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்தனர். மேலும், மதுபானக் கூடத்தை அகற்றும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாதர் சங்க மாநாடு

வெம்பக்கோட்டை, மே 9- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வெம்பக்கோட்டை ஒன்றிய 16-ஆவது மாநாடு செல்லம்மாள், முத்து லட்சுமி ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.தெய்வானை துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகி சஞ்சீவிநாச்சியார் வாழ்த்துரை வழங்கினார். மாநிலச்  செயலாளர் எஸ்.லட்சுமி நிறைவுரை யாற்றினார். புதிய நிர்வாகிகள்: ஒன்றியத் தலை வராக செல்லம்மாள், செயலாளராக முத்துலட்சுமி, பொருளாளராக கே. முத்துமாரி உட்பட ஒன்பது பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.

ஆடல்- பாடல் நிகழ்விற்கு அனுமதி 

மதுரை, மே 9- கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு மனுக்கள் விடு முறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை திங்களன்று விசா ரணை செய்த நீதிபதி ரமேஷ் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆடல் பாடல் நிகழ்ச்சி மாலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் ஆபாச மான வார்த்தைகள், நடனங்களும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

பெரிய தும்மகுண்டுக்கு தேவை அடிப்படை வசதி

விருதுநகர், மே 9- விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே  உள்ளது பெரியதும்மகுண்டு. இங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த 30 குடும்  பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் பெண்களுக்கான கழிப்பறை வசதி இல்லை. பெண்கள் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்தும் நிலை  உள்ளது. சமுதாயக் கூடம், குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை மனு  அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர் முகாம்

இராமநாதபுரம், மே 9- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி யர் சங்கர் லால் குமாவத் தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.  குறைதீர்க்கும் கூட்டத்தில் பொது மக்களிடம் 256 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  மேலும் இராமநாதபுரம் மாவட்டத்  தில் கொரோனா தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என தெரி வித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ஆ.ம.காமாட்சி கணேசன், தனித்  துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கந்தசாமி உள்ளிட்ட அனைத் துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

அரசு ஊழியர் சங்க  அமைப்பு தினம் 

திருவில்லிபுத்தூர், மே 9- விருதுநர் மாவட்டம் திருவில்லி புத்தூரில் அரசு ஊழியா் சங்கத்தின் 39 ஆவது அமைப்பு தின விழா நகராட்சி அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு சங்க கிளைத் தலைவா் திருமூா்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவா் பாலமுருகன், அரசு  ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத் தார். மாவட்ட இணைச் செயலாளர் ராஜ குரு,  ஓய்வூதியர் சங்க  மாவட்டச் செய லாளர்  பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசி னர்.

தமிழகத்தில் 4,310 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோரும் தபால் துறை

மதுரை, மே 8- இந்திய அஞ்சல் துறையில் தற்போது புதிதாக 38,926 காலி யிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள  கிராமின் டாக் சேவக் (Gramin  Dak Servaks) பணியிடங்களுக் கானது. தமிழ்நாட்டில் மட்டும்  4310 காலியிடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளது. எனவே அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப் புக்காக காத்திருந்த இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன டையவும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் 

பணி: Gramin Dak Servaks மொத்த காலியிடங்கள்: 38,926: பணியிடங்களும் (இந்தியா முழுவதும்). தமிழ்நாட்டில் மட்டும் 4,310 இடங்கள் காலியாக உள்ளன. தகுதி: ஒன்றிய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிந்திருப்பதோடு வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படை யில் விகிதங்களின்படி தகுதி யானவர்கள் பட்டியல் தயார்  செய்யப்பட்டு அதனடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in, indianpostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவின ருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2022 தமிழகத்தில் காலியிட விவரம்: மதுரை-181, விருது நகர்-123, தேனி-109, இராமநாத புரம்-122, திண்டுக்கல்-188, சிவ கங்கை-87. தவிர தமிழகம் முழு வதும் காலி இடங்கள் உள்ளன. மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 4,310 இடங்களில் பொதுப்பிரிவில் (UR)-2014, EWS (பொருளாதாரத்தில் பின் தங்கி யவர்கள்)-398, OBC (ஓபிசி)-1018, SC (எஸ்,சி)-719, ST (எஸ்டி)-  30 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தவிர மாற்றுத்திறனாளிகள் (Person with disability) PWD-A-25 PWD-B-46 PWD-C-49 PWD-DE-11, இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன.

மலேசியாவில் கொத்தடிமையாக வேலை  செய்யும் மகன்: மீட்டுத் தர கோரிக்கை

விருதுநகர், மே 9- சாத்தூர், வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மலேசியாவில் கொத்த டிமையாக உணவு விடுதியில் வேலை செய்து வருவதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டுமென, பெற்றோர் மாவட்ட ஆட்சிய ரிடம் திங்களன்று மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த வர் சர்க்கரைராஜ். இவரது மகன் மாரீஸ்வ ரன் (27). இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு  அருப்புக்கோட்டை ஒன்றியம் குருந்த மடத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மூலம் மலேசியாவில் உணவு விடுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.  ஆனால், தற்போது வரை எவ்வித சம்பள மும் அனுப்பவில்லை. அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை. கொத்தடிமை போல் வைத்து வேலை வாங்கி வருகின்றனர்.  எனவே, மலேசியாவில் உள்ள தனது மகனை மீட்டுத் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.