மதுரை, ஆக.12- இரவு நேரப்பணி அல வன்ஸை உச்சவரம்பு இல்லாமல் வழங்க வேண்டும். பதவி சீர மைப்பை புதிய பதவியின் பெய ரைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து ரயில் நிலை யங்களிலும் நிலைய அதிகாரி களுக்கு ஓய்வு அறை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே நிலைய அதிகாரிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று மதுரை மேற்கு நூழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் எஸ்.செந்தில் கண்ணன் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் ப.ராஜீவ் காந்தி, சங் கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர். விஜயராஜன், டிஆர்இயூ மதுரை கோட்ட நிர்வாகி ஜெகதீசன், சங் கத்தின் கோட்ட பொருளாளர் ஆர்.பொன்மாரியப்பன் ஆகி யோர் பேசினர்.