districts

சர்வதேச யோகாசனப்போட்டியில் புஷ்பத்தூர் வித்யா மந்திர் சாதனை

பழனி, ஜூன் 19- கம்போடியாவில் மலேசியாவைச் சேர்ந்த டிராக் இன்டர்நேஷனல் அமைப்பால் நடத்தப்பட்ட சர்வதேச யோகசனப் போட்டியில் பழனி தாலுகா புஷ்பத்தூர் வித்யா மந்திர் பிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். ஒன்பதாம்  வகுப்பு மாணவர் சுஜன் முதலிடம் பெற்று தங்கப்பதக் கத்தையும், ஏழாம் வகுப்பு மாணவர் கித்தேஷ், ஐந்தாம்  வகுப்பு மாணவர் அதர்வதமிழ் ஆகியோர் நான்காம்  இடத்தைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ள னர். வெற்றி பெற்ற மாணவர்களை வித்யா மந்திர் சிபிஎசி  மேல்நிலைப் பள்ளி தாளார் வீரா டி.சாமிநாதன், இயக்கு நர் கார்த்திகேயன், முதல்வர் வசந்தா ஆகியோர் பொற்கிழி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.