தேனி, ஜூலை 18- கட்டுமான நல வாரியத்தில் 35, 36 மற்றும் 37 வது கூட்டத்தில் முடிவு செய்ததை அரசாணையாக வெளியிட வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிர மாக உயர்ந்த வேண்டும். 55 வய தான பெண் கட்டுமானத் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி தொழிலாளர் நலவாரிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.முத்து ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித் தனர். மாவட்டத் தலைவர் எம்.ராமச் சந்திரன், மாவட்டச் செயலாளர் ஜி. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் பி. பிச்சைமணி, சிஐடியு மாவட்டத் தலை வர் டி.ஜெயபாண்டி, மாவட்ட துணைத் தலைவர் வி.மோகன் ஆகியோர் உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 50 பெண் கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை எல்லீஸ் நகரில் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு மாவட்ட பொதுச் செயலாளர் சி. சுப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே. ராஜேந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், பொருளாளர் ஜே. லூர்து ரூபி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கட்டுமான தொழி லாளர் நலவாரிய அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலை வர் ஆர்.எம்.மாரியப்பன் தலைமை யேற்றார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி பேசினார். கோரிக்கைளை விளக்கி கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பி. ராமர், உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் எம்.சாராள் ஆகியோர் பேசினர். முடி வில் சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி.சங்க மாவட்ட பொருளாளர் ம்.பரம சிவம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பல பங்கேற்றனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.வாசுதேவன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத தலைவர் எம்.அய்யத்துரை, சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. சந்தானம் ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.