திண்டுக்கல், ஜுன்.12- கலைஞர் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 41 கவி ஞர்களின் 43 கவிதை நூல் கள், 400 கவிஞர்கள் தொகுத்த நவீன நாலடியார் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. திண்டுக்கல் சக்தி கல்லூரியில் திருப்பூர் மஞ் சிகை பதிப்பகம், முத்தமிழறி ஞர் கலைஞர் இளைஞர் பெருமன்றம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், திண் டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்ட னர். மஞ்சிகை பதிப்பக உரி மையாளர் கவிஞர் ஆபா, சக்தி கல்விக்குழு தாளாளர் வேம்பணன், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் குருவம்மாள், கவிஞர் யவ னிகா ஸ்ரீராம், இந்திய செஞ்சி லுவை சங்கத் தலைவர் காஜா மைதீன், மஞ்சிகை பதிப்பக செயலர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கவிஞர்களின் நூல்களை வெளியிட்டு கௌரவித்தனர்.