districts

விருதுநகர் சந்தை துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பயறு விலை கிடுகிடு உயர்வு

விருதுநகர், ஜூன் 4- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப் பயறு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாமாயில் விலையானது தொடர்ந்து சரிவை சந்தித்து  வருகிறது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய்  15 கிலோ விலையா னது கடந்த வாரம் ரூ.3100 என விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.100  மட்டும் குறைந்து தற்போது ரூ.3 ஆயி ரத்திற்கு விற்கப்படுகிறது. பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.1440க்கு விற்பனை செய்யப்பட்டடு வந்தது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.40  குறைவு ஏற்பட்டு ரூ.1400க்கு விற்பனை யாகிறது. முண்டு வத்தல் 100 கிலோ கடந்த வாரம்  ரூ.15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் விற்பனை  செய்யப்பட்டது. இந்த வாரம் ஆரம்ப விலை யில் குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.13 ஆயி ரம் முதல் 15 ஆயிரம் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு வகைகளில் கடந்த வாரம்  புதுஸ் நாடு விலை உயர்ந்து  காணப்பட்டது. இந்த வாரம் 100 கிலோ நயம் புதுஸ் லயன் வகை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு புதுஸ்  லையன் ரூ.11500க்கு விற்பனை செய்யப்  பட்டது. இந்த வாரம் திடீரென குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ரூ.14 ஆயிரத்திற்கு விற்  பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ  நாடு வகை கடந்த வாரம் ரூ.11,100க்கு விற்கப்பட்டது.

இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.400 வரை உயர்ந்து  தற்போது  ரூ.11500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா எப்.ஏ.க்யூ வகையானது கடந்த வாரத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.10ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. மேலும் உளுந்து  நாடு வகை, லயன்  வகை ஆகியவை 100 கிலோ கடந்த வாரத்தை விட ரூ.200 உயர்ந்து தற்போது ரூ.6500க்கு விற்கப்படுகிறது.   பாசிப் பயறின் விலையானது  கடந்த  வாரம் 100 கிலோ ரூ.8100க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.200 உயர்ந்து தற்போது ரூ.8300க்கு விற்பனை யாகிறது. இதேபோல் பாசிப்பயறு லயன் மீடியம்  வகையானது குவிண்டால் ஒன்று ரூ. 11600க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.400 உயர்ந்து தற்போது ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்துக! மேலும், ஒன்றிய மற்றும் மாநில அரசு கள், தொடர்ந்து அதிகரித்து வரும் பருப்பு  வகைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளின் மூலம் குறைந்த விலைக்கு துவரும் பருப்பு,  உளுந்தம் பருப்பு உள்ளிட்ட அனைத்து பருப்புகளும் கிடைத்திட விரைவில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.