districts

img

மதுரை புதூர் சம்பக்குளத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பு: துணை மேயர் ஆய்வு

மதுரை, மே 12- மதுரை மாநகராட்சி 10 ஆவது வார்டு சம்பக்குளம் பகுதியில் பொது பாதையை தனிநபர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டு களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் மதுரை துணை மேயர் டி. நாகராஜனிடம் புகார் அளித்த னர். இதைத்தொடர்ந்து மதுரை துணை மேயர் டி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் முத்து குமாரி ஆகியோர் நகரமைப்பு அலு வலர் சுப்புத்தாய் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார் .பின்னர் துணை மேயர் கூறுகையில், இந்த பாதைக்கான ஆவ ணங்கள் சரி பார்க்கப்பட்டு மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற் பாடுகள் செய்யப்படும் என்று கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு,  பகுதிக்குழு உறுப்பினர்கள் கணேசன், முத்து, ராதா, ராஜு ஆகியோர் உடனி ருந்தனர்.