districts

img

குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளிபாளையம், ஜன.12- பள்ளிபாளையம் அருகே குப்பைக்கிடங்கு அமைப் பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம் பாளையம் பேரூராட்சி 15ஆவது வார்டில் தென்றல் நகர்  உள்ளது. இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில்  சேகரிக்கப்படும் குப்பைகளை தென்றல் நகரில் கிடங்கு  அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பேரூ ராட்சி ஊழியர்கள் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டனர்.  இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், குப்பைக் கிடங்கு  அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இச்செய்தியறிந்த ஆலாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ண வேணி, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் திரும்பி சென்றனர்.