தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். இதில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.