districts

img

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பொதுக்கூட்டம்

மதுரை, ஜூலை 20- பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீதும் , வழி பாடு தலங்கள் , கல்வி நிலையங் கள் மீது தொடுக்கப்படும் தாக்கு தல்களை கண்டித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர் முதல் தெருவில் பொதுக்  கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட துணை செயலாளர் எம்.முகம்மது ஷரீப் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.பி. சுப்பையா, எஸ்.என். நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் அருணன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட செயலாளர் கே. அலா வுதீன், மதுரை மாவட்ட முஸ்லிம்  ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ.  லியாகத் அலி , துணை மேயர் டி.  நாகராஜன், சோக்கோ அறக்கட் டளை இணை இயக்குநர் வழக்க றிஞர் எஸ். செல்வகோமதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெண் கள் பிரிவு தெற்கு மாவட்ட செய லாளர் பேரா. பாத்திமா நிஷா ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.