தூத்துக்குடி, டிச.5- தூத்துக்குடி தருவை மைதான உள் விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளி கள் தினவிழா ஆட்சியர் செந் தில்ராஜ், தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் 204 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70.06 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றது. மேலும் பல் வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு பரிசுகளும், சிறப்பாக பணியாற்றிய மாற்றுத்திறனாளி அலுவலகத்தை சார்ந்த அலு வலர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசுகளும் வழங்கப்பட் டது.