விருதுநகர், ஜூலை 18- 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக் கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்து வக் காப்பீட்டுச் செலவுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற போரா ட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் இ.பரமசிவம் தலைமையேற்றார். மாவட்ட பொருளாளர் மாரியப்பன், ஓய்வூதியர் சங்க கூட்ட மைப்பின் மாவட்ட செயலா ளர் கா.சிவபெருமான், சிஐ டியு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி ஆகியோர் பேசி னர். இதில், மாவட்ட செயலா ளர் இராமசுப்புராஜ் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகி கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் முனைவர் ச.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் அ.பால்முரு கன், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வி. பிச்சைராஜன். மாவட்ட இணைச் செயலா ளர் கே.நாராயணன், மு. பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர். தோழமைச்சங்க நிர்வாகிகள் எஸ். டி. எஸ். திருவேங்கடராஜ், எஸ்.முத்துராமலிங்கம் க. நீதி ராஜா ஆகியோர் ஆதரித்துப் பேசினர். மாநில பொருளா ளர் என். ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார், மாவட்டப் பொருளாளர் என். ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டதுணைத் தலைவர் ஜி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ். முருகேசன், மாவட்ட செய லாளர் பி.புஷ்பரர், அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலா ளர் பி.சேகர், சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெனிஸ்டா ஆகியோர் பேசினர்.