விருதுநகர், நவ.9- விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழி யர்கள் பணிச் சுமையின் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உயர் அதிகாரிகளின் தொடர் அழுத்தம் காரணமாக, ஊராட்சி செயலர்கள் பலர் இக்காலத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த ஊழியர்களின் குடும் பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, உயர் அதிகாரிகள் மூலம் அழுத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.