இராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி விகிதத்தை குறைக்க வேண்டும். வராத தாமிரபரணி தண்ணீருக்கு விதித்துள்ள வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சோழராஜபுரம் 2 ஆவது வார்டில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.