districts

img

கொட்டாம்பட்டி பகுதியில் சு.வெங்கடேசன் எம்.பி., திட்டப்பணி ஆய்வு- மக்கள் சந்திப்பு இயக்கம்

மதுரை, மே 31- மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மே 31 செவ்வாயன்று  மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி,  திட்ட பணிகளை ஆய்வு செய்தார். கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றி யம் பாண்டாங்குடி ஊராட்சியில் துவங்கி சொக்கலிங்கபுரம், கொட்  டாம்பட்டி, மணப்பச்சேரி, குன்னா ரம்பட்டி பட்டூர், கச்சிராயன்பட்டி, மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. மக்கள் சந்திப்பு இயக்கத்தில் சாலை வசதி, குடி நீர் வசதி, கழிப்பறை வசதி, முதி யோர் மற்றும் விதவை பென்ஷன்,  முக்கியமாக 100 நாள் வேலை முறை யாக வழங்கவில்லை, சரியான ஊதி யம் வழங்கவில்லை என்று மக்கள் புகார்கள் கூறினர். புகார்களை பெற்  றுக்கொண்ட மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், 100 நாள்  வேலையில் உள்ள பிரச்சனைகளில்  உடனடியாக தலையிட்டு முடித்து வைத்தார். 

விவசாயியின் மின்சார பிரச்சனைக்கு உடனடி தீர்வு

குறிப்பாக பாண்டாங்குடி ஊராட்சியில் விவசாயத்திற்கு மின் சாரம் முறையாக வழங்கவில்லை என விவசாய அளித்த மனுவினை பெற்று உடனடியாக மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு வரச் சொல்லி பேசி பிரச்சனைக்கு தீர்வு காண நட வடிக்கை எடுத்தார். நானும் விவசாய வீட்டுப் பிள்ளை தான் என்று சு.வெங்கடேசன் பேசி யதைக் கேட்டு அந்த விவசாய மிக்க மகிழ்ச்சியடைந்தார். மேலும் பள்ளிகட்டிடம், காம்ப வுண்ட் சுவர் மற்றும் பல ஊர்களில்  பேருந்து நிறுத்தம், ரேசன் கடை கேட்டும் மனு அளித்தனர். மனு வினை பெற்று கொண்டு, விரைவில்  அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு  நிறைவேற்றுவதாக கூறினார். பாண்டாங்குடி நூலகம், மணப்பச்சேரி அருகே உள்ள ம. வெள்ளாளபட்டி ஊராட்சி ஒன்றிய  நடுநிலை பள்ளியினை பார்வை யிட்டு தேவையான அடிப்படை வச திகள் செய்ய அரசிடம் நிதி கேட்டுள்  ளேன். விரைவில் நிதி வந்தவுடன் நிறைவேற்றப்படும் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு  உட்பட்ட பகுதியில் அரசு நலத்திட் டங்கள் முறையாக சென்று சேரு கிறதா, பயனாளிகள் அரசு விதி களின்படி முறையாக தேர்வு செய் யப்படுகிறார்களா? திட்டங்கள் சரி யாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்யவும் அதே நேரத்தில் மக்களி னுடைய கோரிக்கை மனுக்களை  நேரடியாக பெற்றுக் கொள்வ தற்குத்தான் இங்கே வருகை தந்  துள்ளேன். இங்கே வருகை தந்த  போது பல பிரச்சனைகளை கவ னத்துக்கு கொண்டு வருகிறார்கள். சில பிரச்சனைகளை உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். குறிப்பாக மின்சாரம் சார்ந்த பிரச்சனை, விவ சாயம் செய்வதில் இருக்கிற பிரச்ச னைகளை மக்கள் கூறினர் என்று தெரிவித்தார். முன்னதாக சொக்கலிக்கபுரம் குன்னகரம்பட்டி, கொட்டாம்பட்டி ஊராட்சி என பல ஊராட்சிகளில் 100நாள் வேலை பார்க்கும் தளத் திற்குச் சென்று ஆய்வு செய்தார்

அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலையை உறுதிப்படுத்துவோம்

அதனை தொடர்ந்து அவர்களி டம் பேசுகையில், கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் சுற்றுவட்டார பகுதி யில் இதுவரை 100நாள் வேலை எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால்  இந்த ஆண்டு அனைத்து கிராமத்திலும் 100 நாட்களுக்கான வேலையை உறுதிப்படுத்துவது நம்முடைய முக்கியமான வேலை.  மேலும் ஊதியம் நமது உரிமை. சாலை வசதியை பற்றி அதிகம் கூறி யுள்ளனர். சாலை அமைத்து தரப் படும். கோரிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றுவோம் என்றார். முன்னதாக பாண்டாங்குடியை ஊராட்சியைச் சேர்ந்த மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை  ஒருங்கிணைந்த கூட்டுப் பண் ணைத் திட்டம் சார்பில் 2021- 2022க்கான 5 லட்சம் ரூபாய் மானியத்தில் மினி டிராக்டர் மற்றும் கருவிகள் வழங் கப்பட்டது. மாவட்ட வேளாண் &  தோட்டக்கலை அதிகாரிகள், கொட்  டாம்பட்டி வட்டாரவளர்ச்சி அலு வலர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த  அதிகாரிகள் உடனிருந்தனர். கேசம்பட்டியில் மாற்றுத்திற னாளிகள் உதவித் தொகை வர வில்லை என்பன குறித்து அதிகாரி களிடம் தொடர்பு கொண்டு பேசி யுள்ளேன்.  ஒருவார காலத்திற்குள் மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்க வேண்  டிய உதவித் தொகையை கிடைக் கும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார். பட்டூரில் ஒரு மாற்றுத்  திறனாளி பெண்ணுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற் றுத்திறனாளிக்கான வாகனம் வழங்குவதாக உறுதியளித்தார். இந்த நிகழவில் உதவி திட்ட அலுவலர் எம்.காந்திராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய உதவி பொறியாளர்கள், விஏஒ, மற்றும் ஊராட்சி தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திக், தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. வேல்பாண்டி, எம்.கண்ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் வி. அடக்கிவீரணன், எஸ்.பி.மண வாளன், பி.எஸ்.ராஜாமணி, திமுக  ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, பழனி ஆகியோர் பங்கேற்றனர்.