தூத்துக்குடி, அக். 12 தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை யின் “மாற்றத்தை தேடி திட்டம்” பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி காவல் துறை சார்பில் மாற்றத்தை தேடி என்ற மக்கள் நலனிற்கான பயணத்தை தொடங்கி னோம். இதுவரை 2235 இடங்களில் மாற்றத் தை தேடி என்ற இத்திட்டம் நடைபெற்றுள் ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்பட 82 இடங்கள் மற்றும் பொது இடங்கள் என 2317 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இது வரை 69 ஆயிரத்து 849பேர் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். இதன் மூலம் கொலை மற்றும் கொள்ளைக் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், சைபர் குற்றங்கள், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் நபர்கள், குற்ற நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 215 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளனர் என்றார்.