மதுரை, ஜூலை. 12- சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் பணியிடங்களை கல்வித் துறை யிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிரப்ப வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ஜேசுபிரபா. இவர் 2014-ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் செய் யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக் கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட் டது. இவரது நியமனத்தை 2017-ஆம் ஆண்டு அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தனது நியமனத்தை 2014- ஆம் ஆண்டு முதல் அங்கீகரித்து சம்பளப் பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங் கக்கோரி ஜேசுபிரபா சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார். இதை திங்களன்று விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி அமர்வு பிறப்பித்த உத்தரவு:- ஆசிரியர்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பணி நியமனங்கள் அந்தந்த மறை மாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு மூப்பு பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையான பதிவேட்டை பராமரித்து வருகின்றன. இந்த நியமனங்களை ஆய்வு செய்தால் பணி நியமனம் பெற்றவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரே மதப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர்.
கல்வித்துறை உபரி ஆசிரியர் பிரச்ச னையைச் சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த நிர்வாகங்கள் ஒரு பள்ளி யில் காலியிடம் ஏற்பட்டால் உடனடியாக நிரப்புகின்றன. அவர்கள் இன்னொரு பள்ளி யில் உபரி ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டுகொள்வதில்லை. எனவே எதிர்காகலத்தில் சிறு பான்மைக் கல்வி நிறுவனங்கள் ஆசிரி யர் பணியிடங்களை கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிரப்ப வேண்டும். பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி நிர்வாகம் அனுப்பும் பரிந்து ரைகளை காரணம் இல்லாமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடி யாது. ஆசிரியர் நியமன ஒப்புதல் தொடர் பாக கல்வி நிறுவனங்களிடம் இருந்து பரிந்துரை வந்தால் அந்தப் பரிந்துரை மீது பத்து வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவி லும், அமர்வு உத்தரவிலும் தலையிட வேண்டியதில்லை. மறுசீராய்வு மனு முடிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.