districts

img

முறைகேடான மாறுதலை ரத்து செய்திடுக: தேனியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

தேனி ,அக்.28- விதிகளுக்கு புறம்பாக, முறைகேடாக  வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்துவிட்டு ,பணி நிரவலில் சென்ற ஆசிரியர்க ளுக்கு மாறுதல் வழங்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியு றுத்தி   தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  தேனி மாவட்ட தொ டக்க கல்வி அலுவலகத்தில் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்  தொடர்ந்து நடைபெற்றது  விதிகளுக்கு புறம் பாக வழங்கப்பட்ட மாறு தல் உத்தரவுகளை ரத்து  செய்துவிட்டு ,பணிநிரவ லில் சென்ற ஆசிரியர்களு க்கு மாறுதல் வழங்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  வியாழனன்று காலை முதல் தேனி மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.இரவு முழுவதும் ஆசிரியர் கள்,மாவட்ட தொடக்க கல்வி  அலுவலக வளாகத் தில் தங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். வெள்ளிக் கிழமை பகலிலும் காத்தி ருப்பு போராட்டம் நடை பெற்றது .போராட்டத்திற்கு . சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலை மை வகித்தார் .மாவட்டச் செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார் .மாநில செயலாளர் தே.முரு கன் கண்டன உரையாற்றி னர்.தேனி வட்டார செய லாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  கலந்து கொண்டு முழக்க மிட்டனர்.