districts

img

கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

திருநெல்வேலி, டிச. 2- டர்பைனில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.  நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக் கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை காலையில் 2-வது அணு உலை டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அணு உலை டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும், ஊழியர்களும் மும்முரமாக ஈடுபட்டனர். டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்து, வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த அணு உலையில் தற்போது 260 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், ஓரிரு நாட்களில் முழு மின்உற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது. முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

;