மதுரை, நவ.27- மின்துறையை பொதுத் துறையாக பாதுகாத்திட வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும் பப்பெற வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியும் மின்வாரி யத்தின் இன்றைய நிலை யும், பஞ்சப்படி உயர்வுக் காக ஓய்வூதியர்களின் போராட்ட நிலையும் குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் மதுரை கிளை சார்பில் சிறப்பு பேரவை மூட்டா அலு வலகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மதுரை கிளைத் தலைவர் ஆர். மாரிச்சாமி தலைமை வைத் தார். கிளைச் செயலாளர் ஆர்.சர்தார் பாட்ஷா வர வேற்று பேசினார். மாநில துணைப் பொதுச் செயலா ளர் வி.பிச்சை ராஜன் அறி முக உரையாற்றினார். மாநி லத் துணைப் பொதுச் செய லாளர் எம். பாலசுப்பிரமணி யன் விளக்கி பேசினார். கிளை பொருளாளர் ஆர். பால்ராஜ் நன்றி கூறினார்.