திண்டுக்கல், ஜுலை.21 மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண் டும் என்று அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூ தியர்கள் மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர்கள் சங்த்தின் 4வது மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் வியாழனன்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பி.மோகன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை யாற்றினர். மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஏ.மருதை தலைமை வகித் தார். பி.பாலசுப்ரமணியன், எஸ்.பழ னிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். டி.அனந்தராமன் வரவேற்றார். செயலாளர் வி.ராசாராம், ஏ.மாரி யப்பன் ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். தோழமைச்சங்க நிர்வா கிகள் எஸ்.எம்.ஜெயசீலன், எஸ்.ஜான்போர்ஜியா, பி.நடராஜன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். ஆர்.கே.பாரதி நன்றி கூறினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜுன் 30ல் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு நேசனல் இன்கிரிமெண்டை கணக்கிட்டு ஓய்வூ தியத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால பஞ்சப்படி நிவாரண நிலுவைத்தொகை யை வழங்க வேண்டும். மூத்த குடிமக்க ளுக்கு ரயில் பயணம் செய்யும் சலு கையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. (நநி)