மதுரை, ஜன.19- மதுரை மாவட்ட சிஐடியு அப்பள தொழிலாளர் சங் கம், கட்டுமான தொழிற்சங் கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா, கலை நிகழ்ச்சி விளையாட் டுப் போட்டிகள் ராமையா தெருவில் நடைபெற்றது. அப்பள தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் இரா. தெய்வராஜ், மாவட்ட துணை தலைவர் பா. பழனியம்மாள், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராஜேந்திரன் மற் றும் மாதர், வாலிபர் , அப்பள தொழிலாளர் சங்க நிர்வாகி கள் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு களை வழங்கினர்.