districts

img

திண்டுக்கல் கொசவபட்டி ஜல்லிக்கட்டு பாதியிலே நிறுத்தம்

நத்தம்,ஜன.20-  விதிமுறைகளை பின் பற்றாததால் திண்டுக்கல் கொசவபட்டியில் ஜல்லிக் கட்டு போட்டி பாதியிலே நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் அருகே கொசவ பட்டியில் புனித அந்தோணி யார் கோவில் திருவிழாவை  முன்னிட்டு ஜனவரி 20 வெள்ளியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, கோட்டாட்சியர் பிரேம்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த ஜல்லிக் கட்டில் திண்டுக்கல்,திருச்சி, தேனி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 425 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட னர். திண்டுக்கல் மாவட்டத் தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்ப தால் இதனைக் காண ஆயி ரக்கணக்கானோர் குவிந்தனர்.  வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளை களை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர், பார்வையாளர்கள் 15 பேர் உள்பட 21 பேர் காயம டைந்தனர்.  இந்நிலையில் விதி முறைகளை முறையாக பின்பற்றாததால் ஜல்லிக் கட்டு போட்டியை நிறுத்த எஸ்.பி. பாஸ்கரன் உத்தர விட்டார். நீதிமன்ற உத்த வை மீறி சிலர் பதிவு செய்யப் படாத காளைகளை மொத்த மாக வாடிவாசலுக்கு கொண்டுவந்ததால் பாது ாப்பு கருதி ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தும்படி எஸ்.பி.உத்தரவிட்டு நட வடிக்கை மேற்கொண்டார். விழாவில் மாவட்ட ஆட்சி யர் விசாகன், திண்டுக்கல்  எம்.பி வேலுச்சாமி, முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம், நத்தம் யூனியன் சேர்மன் கண் ணன், திமுக மாவட்ட பொரு ளாளர் விஜயன், நத்தம் பேரூ ராட்சி தலைவர் சேக்சிக்க் கர்பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.