தேனி, நவ.28- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட் டுப் போராடிய மாதர் சங்க தலைவர்கள் மீது அடக்கு முறையை ஏவிய காவல் துறையைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.மீனா, மாவட்டச் செயலாளர் பி.சித்ரா, எஸ்.வெண்மணி, ஆர்.தனலட்சுமி, அம்ச மணி, எஸ்.ஈஸ்வரி, எம். அன்னலட்சுமி, கதீஜா பேகம், ஜெயபாண்டி, சாந்தி, சுதா, ஜோதிமணி, மஞ்சு, ஜி.சண்முகம், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. ராஜா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.