districts

img

எழுத்து வீட்டுக்காக அல்ல, சமூகம் வீடுபேறு அடைவதற்கே!

தேனி, மார்ச் 9-     வீட்டுக்காக  எழுத வேண்டாம். சமூ கம் வீடுபேறு அடைய வேண்டும் என்ப தற்கு எழுத வேண்டும் என எழுத்தாளர் களுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் . தேனியில் நடைபெற்றுவரும் புத்த கத் திருவிழாவின் ஆறாம் நாளன்று நடைபெற்ற நிகழ்விற்கு ஊரக வாழ்வா தார இயக்க  திட்ட அலுவலர் ஜெ.ரூபன்  சங்கர்ராஜ் தலைமை வகித்தார். கவிப்  பேரரசு வைரமுத்து சிறப்பு விருந் பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டபம் தின ராகக் கலந்து கொண்டு பேசினார் .மாவட்ட ஆட்சியர் எஸ்.ஆர்.ஷஜீவனா,  பட்டிமன்ற, பேச்சாளர் கவிதா ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர் . விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது:-  நான் முதல் முதலில் வாசித்தது ‘ஏழை படும்பாடு’ என்ற பிரஞ்சு மொழி பெயர்ப்பு நாவல். க.விலக்கு அருகே கரட்டுப்பட்டியில் அந்த நாவலை லாந்தர் வெளிச்சத்தில் இரவில் தொடங்கி  சேவல் கூவும் நேரத்தில் வாசித்து முடித் தேன். அன்று என் நெஞ்சில் ஏற்றப்பட்ட  புத்தக வாசிப்பு என்ற நெருப்பு இந்த  எழுபது வயதில் எரிமலையாக வளர்ந்தி ருக்கிறது.  உயிரோடு உள்ள போதே எழுத்தா ளர்களையும், கவிஞர்களையும், படைப்பாளர்களையும், ஆசிரியர் களையும் வாழ்த்தி விடுங்கள்.  எழுத்தாளர்கள் எந்தக் காலத்தி லும் மதிக்கப்பட்டது இல்லை.

பாரதி யாரை மதித்தீர்களா? புதுமைப்பித் தனை மதித்தீர்களா?.  எந்த தேசத்தில் கற்றவர்கள் மதிக் கப்படுகிறார்களோ அந்த ஆட்சி அறி வுள்ள ஆட்சி என்று பொருள். அந்த அர சன் அறிவுள்ள அரசன் என்று பொருள்.  இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு  கொண்டிருக்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், படைப்பாளர் களையும் அறிந்து மதிக்கிறார் என்றால்  அறிவுள்ள தந்தைக்குப் பிறந்த அறி வுள்ள தமிழன் அவர் என்பதால் அவரை நாம் போற்றுகிறோம்.  சாகித்திய அகதெமி விருது வாங் கும் படைப்பாளர்களுக்கு எல்லாம் அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருதோ, ஞானபீட விருதோ அல்லது அரசின் உயரிய விருது பெற்றுக் கொண்டிருக்கும் எல்  லோருக்கும் ஆளுக்கு ஒரு வீடு அவர்கள் விரும்புகிற ஊரில் அர சாங்கத்தால் வழங்கப்படும் என்று அறி வித்திருக்கிறார். வீட்டுக்காக எழுத வேண்டாம். இந்த  சமூகம் வீடுபேறு அடைய வேண்டும் என்பதற்காக எழுதுங்கள். அதில் தான் உங்களுக்கு வெற்றி இருக்கிறது. உண்  மையான எழுத்து எதையும் எதிர்பார்ப்ப தில்லை. பதவி ஏற்ற குறைந்த நாளில் சிறப்பாக முதல் புத்தகத் திருவிழாவை  நடத்திய மாவட்ட ஆட்சியர் எஸ்.ஆர். ஷஜீவனாவை பாராட்டுகிறேன் என்றார். நிகழ்ச்சியில் மகளிர் தினந்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தை சேர்ந்த  பெண் படைப்பாளர்களை வைரமுத்து கெளரவித்தார்.