districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உறுதிமொழி ஏற்பு

விருதுநகர், ஜன.28- விருதுநகர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 73வது குடியரசு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. விருதுநகர் பாத்திமாநகரில் நகர்குழு உறுப்பினர் பி.ராஜா தலைமையில் மூத்த தோழர் பி.சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகரச் செயலா ளர் எல்.முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் ஆகயோர் விளக்கிப் பேசினர்.   சூலக்கரையில் கற்பூரம் தலைமையில்   வடக்கு ஒன்றிய செயலாளர்  ஆர். முத்து வேலு முன்மொழிய உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன்,  சிஐடியு மாவட்ட உதவி தலைவர் எம். அசோகன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். சிவகாசி பராசக்தி காலனியில்  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜே.லாசர் தலைமையில் ஆர்.கணேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன், நகர செயலாளர் இரா.சுரேஷ்குமார் கலந்து கொண்டனர்.   பாலையம்பட்டியில் முத்திருளன் தலை மையில்  கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.பரமசிவம் துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை சிறப்புரை யாற்றினார். ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர். மல்லாங்கிணறில் பரமசிவம் தலை மையில் வட்ட செயலாளர் ஏ.அம்மாசி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் சிறப்புரை யாற்றினார்.  

அருப்புக்கோட்டை திருநகரத்தில் பெரியசாமி தலைமையில் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து துவக்சி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஆலங்குளத்தில் ஒன்றிய செயலாளர் எம்.முனியசாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டி யன் சிறப்புரையாற்றினார். இராஜபாளையத்தில் சிபிஎம் சார்பில் வ. உ. சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவில்லிபுத்தூரில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் நடை பெற்ற  இயக்கத்தில் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் பேசினார்.