சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு-11இ-ல் உள்ள சாத்தப்பர் ஊரணியில் தூய்மை நகருக்கான மரம் நடுதல்- உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், துணைத் தலைவர் மா.கார்கண்ணன், மன்ற உறுப்பினர்கள் என்.எம்.ராஜா, சு.ஜெயகாந்தன், சி.எல்.சரவணன், காந்தி, விஜயகுமார், வீ.சேதுநாச்சியார், வீரக்காளை, ரா.ராஜேஸ்வரி ராமதாஸ், பிரியங்கா சண்முகராஜன், சுபைதாள்பேகம் சீமான், நகராட்சி ஆணையாளர்(பொ) பாண்டீஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.