திண்டுக்கல்,அக்.9- திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறு கின்ற ஒன்பதாவது திண்டுக்கல் புத்தகத்திருவிழாவில் அக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை மாலை திண் டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சி யர் முனைவர் மா.வள்ளலார் எழு திய “திண்டுக்கல்லில் எழுதிய வர லாறு” என்ற புத்தகம் வெளியிடப் பட்டது. சிந்தனை அரங்கத்தில் எழுத்தாளர் சா.கந்தசாமி நினைவு மேடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆட்சி யர் விசாகன் தலைமை வகித்தார். நூலின் முதல் பிரதியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, முன்னாள் மாநிலங்க ளவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் பெற்றுக் கொண்டு சிறப்பு ரையாற்றினார். நூலாசிரியர் வள்ள லார் ஏற்புரையாற்றினார். எம்.எல். கேசவன் நன்றி கூறினார். திண்டுக்கல் இலக்கிய களத் தின் நிர்வாக செயலாளர் எஸ். கண்ணன் வரவேற்றார். தொழில திபர் ஜி.சுந்தர்ராஜன், திண்டுக்கல் கம்பன் கழகத்தின் துணைத் தலை வர் தேவேந்திரன், நாகா லிமிடெட் நிறுவன சேர்மன் கமலக்கண்ணன், பார்வதி கல்விக்குழுமத்தின் தலை வர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.எம். பொறி யியல் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமரன் ,கோயம்பத்தூர் சரக காவல்துறை துணைத் தலை வர் எம்.எஸ்.முத்துசாமி, பண்ணை கல்விக் குழும தலைவர் கார்த்தி கேயன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கம்
புத்தகத் திருவிழாவில் தீக்கதிர் நாளிதழ், செம்மலர் கலை இலக்கிய மாத இதழ், மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் ஆகிய வற்றுக்கான சந்தா சேர்ப்பு இயக் கம் நடைபெறுகிறது. புத்தகத் திரு விழா கடை எண் 80 இல் சந்தாக்கள் சேகரிக்கப்படுகின்றன. தீக்கதிர் நிருபர்கள் இல.முருகேசன், மாலதி, ஹரிஹரன் மற்றும் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.முத்துச்சாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக செயல்படு கிறார்கள்.
புத்தகத் திருவிழாவில் இன்று
திண்டுக்கல் புத்தகத் திரு விழாவில் திங்கள்கிழமையன்று மாலை பாடலாசிரியர் புல மைப்பித்தன் நினைவு மேடை சிந்தனை அரங்கத்தில் “திரை இசையில் வாழ்வியல் சிந்தனை கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார், காலையில் கருத்தரங்க கூடத்தில் பம்பா பாக்கியா நினைவு மேடையில் சுகாதார வினாடி வினா நடைபெறுகிறது.
திண்டுக்கல் புத்தகத் திரு விழாவில் குழந்தை களுக்கான இலக்கிய நூல்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. பாரதி புத்தகாலயத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள புக்ஸ் ஃபார் சில்ட்ரன் என்ற கடைகளில் (கடை எண் 15, 16) குழந்தை இலக்கிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் எழுத்தாளர் மதுக்கூர் ராம லிங்கம் எழுதிய கையளவு கடல், முனைவர் மாதவன் எழுதிய புவியை சுற்றும் பூசணி, ராம லிங்கம் எழுதிய லூசு, பேராசிரி யர் சிவ தாஸ் எழுதிய கராத்தே ஆடு, கிரேஸ் எழுதிய கிளி மரம், வள்ளியப்பன் எழுதிய இளை யோருக்கான மார்க்ஸ் கதை, டாக்டர் சிரி எழுதிய வெள்ளி மயி லிறகு, தேனி சுந்தர் எழுதிய அப்பாவின் டைரி, முத்து கண் ணன் எழுதிய ரெட் இங்க், தமிழ்செல்வன் எழுதிய றெக்கை கள் விரியும் காலம் என்பன உள்ளிட்ட சிறுவர்களுக்கான பல புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன, பள்ளி மாணவர்கள், குழந்தை கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள்.