districts

img

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மறியல்

நத்தம், மே 11- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யா பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி மே 12 வெள்ளிக்கிழமையன்று நடை பெறுவதாக இருந்தது. இந்நிலையில் கண்மாயில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், ஈரப்பதமாக உள்ளதாக கூறி  ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.  மேலும் வருகிற 21 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துமாறும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்  கட்டை 12 ஆம் தேதியே நடத்த வலியுறுத்தி அய்யாபட்டி யைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் நத்தம் பேருந்து நிலைய  ரவுண்டானா முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் பிரேம்  குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் உதயக்குமார், தாசில்தார் சுகந்தி, காவல் ஆய்வாளர்  தங்கமுனியசாமி உள்ளிட்டோர்  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆய்வு  செய்த அதிகாரிகள் ஈரப்பதம் குறைந்ததை அடுத்து ஜல்  லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தகவல் தெரிவிக்கபட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.