மதுரை, டிச. 23- தமிழக அரசு மருத்துவ மனைகளில் காலியாக வுள்ள 1350 - க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்க ளை மக்கள் நலன் கருதி மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உடன் நிரப்ப வேண்டும். வேலை வாய்ப்பு அலுவல கம் வழியாக பரிந்துரைக் கப்பட்டு அரசு விதிகளின் படி முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை அர சாணை அறிவிப்பின் படி சமூக நலத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பணிவரன் முறை செய்திட வேண்டும் . மருந்தாளுநர் கள் . தலைமை மருந்தாளு நர்கள் , மருந்து கிடங்கு அலு வலர்களுக்கு தமிழக முதல் வர் அறிவித்த கொரோனா ஊக்கத்தொகையினை வழங்க வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர் சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தபால் நிலையத்தில் மாநிலச் செயலாளர் ஆனந்தவல்லி, மாவட்டச் செயலாளர் அ. பாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட நிர்வா கிகள் பலர் கலந்து கொண்ட னர்.மதுரை புறநகர் சார்பில் வியாழனன்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத் திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் உ. சண்முகம் விளக்கிப் பேசி னார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.நீதி ராஜா சிறப்புரையாற்றினார். திருவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை வகித் தார். மாநில இணைச் செயலாளர் ஆனந்தவள்ளி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.