மதுரை, டிச.10- ஒன்றிய பாஜக அரசு ஒப்புக் கொண்டு,நிறைவேற்றாமல் நிலு வையிலுள்ள கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையைச் ( MSP ) சட்டப்பூர்வ மாக அமல்படுத்துவதற்கான எம்எஸ்பி சட்டத்தை இயற்ற வேண்டும். மின்சா ரச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் முன்வைக்கும் முன், சம் யுக்த் கிசான் மோர்ச்சாவுடன் கலந்தா லோசிக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் அவர் களின் தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படா தது குறித்து நாடாளுமன்றத்தில் எடுத் துரைத்து, அந்த உறுதிமொழியை உட னடியாக நிறைவேற்ற ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ( ஐக்கிய விவசாயிகள் முன்னணி) சார்பில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை பெரி யார் பேருந்து நிலையம் கட்டபொம் மன் சிலை அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சந்தனாம் தலைமையில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ். பி. இளங்கோவன் முன்னிலையில், சிபிஐ மாவட்ட நிர்வாகி நாகஜோதி, விசிக விவசாயிகள் பாதுகாப்பு இயக் கம் மாநில துணைச் செயலாளர் தென் னரசு, மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் சிவகாமி, ராமலிங்கம், ரவி, களஞ்சி யம் பெண் விவசாயிகள் சங்கம் கே. ஜோதி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் சண்முகம், திராவிட கழகம் செந்தில் உள்ளிட்ட பலர் ஊர்வலமாக வந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.