மதுரை, மார்ச் 20- திரையிசைப் பாடகர் டி. எம்.சௌந்தரராஜனுக்கு சிலை அமைப்பதற்கான ஏற் பாடுகள் மதுரை மாவாட்ட நிர்வாகம் சார்பில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் சிலை வைப்பதற்கான இடத் தினை தேர்வு செய்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் முன்மொழிவு மனு மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்டச் செய லாளர் மா. கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மதுரை மாநக ராட்சி துணை மேயர் டி. நாகராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜா. நர சிம்மன், தெற்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின் ஆகியோர் திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ்சேகரை நேரில் சந்தித்து இடத் தேர்வுக்கான மனுவினை வழங்கினர். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், டி. எம்.சௌந்தரராஜனுக்கு சிலை வைப்பதற்கான இடம் இன்னும் தேர்வாகவில்லை. ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது என்றார். திருமலை நாயக்கர் மஹால் மற்றும் தெப்பக் குளம், மதுரை கிழக்கு மண் டலம் ஆகிய பகுதிகளில் அமைக்கலாம் என்றும் தினமணி தியேட்டர் அருகில் பழைய கிழக்கு மண்டல அலுவலகம் இருந்த இடத் தில் வைப்பதற்கான சாத்தி யக்கூறுகள் உள்ளது என் றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறினர். அதற்கு ஆட்சியர், திரு மலை நாயக்கர் மஹால் பகு தியில் ஒன்றிய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்க வேண்டும். தெப்பக்குளம் பகுதி நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. அங்கு அனுமதி பெறுவதற் கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே மாநக ராட்சிக்கு உட்பட்ட இடத்தில் வைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆட்சியர், சிலைக்கான இடத்தேர்வை ஆய்வு செய்ய உத்தரவிட் டார்.