districts

காதுகேளாதோருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கோரி மனு

மதுரை, ஜூன் 8-  நாமக்கல், சென்னை போன்ற மாவட்டங் களில் வழங்குவதுபோன்று காது கேளாதோர் மாற்றுத் திறனாளி களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்  டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மதுரை மாநகர் சார்பில்  செவ்வாயன்று தெற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் மனு அளிக்கப்  பட்டது. காது கேளாதோர் அமைப்பின் தலை வர் ஏ.பாலமுருகன் தலைமையில் வட் டார போக்குவரத்து அதிகாரியிடம் மனு  அளித்தனர். மனுவில், காது கேளாத  மாற்றுத்திறனாளிகள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் பணிக்கு சென்றுவர மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில். இருசக்கர  வாகனம் அவர்களுக்கு நன்றாக ஓட்டத்  தெரியும். பிற மாவட்டங்களில் ஓட்டுநர்  உரிமம் வழங்குவது போல் மதுரை வட்  டார போக்குவரத்து அலுவலகம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்  டச் செயலாளர் பி.வீரமணி, பொருளா ளர் வி.மாரியப்பன், காதுகேளாதோர் சங்க செயலாளர் எம்.சொர்ணவேல், சிஐ டியு சாலை போக்குவரத்து சங்க மாவட்  டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு ஆகி யோர் பங்கேற்றனர்.