மதுரை, டிச.14- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங் கள் மற்றும் பல்வேறு மாநக ராட்சிக்கு உட்பட்ட கடை களில் மாற்றத்திறனாளிகள் மாநில நலத்துறை மற்றும் தமிழக அரசு வெளியிட் டுள்ள அரசாணையின்படி தள்ளுவண்டி கடைகள் போன்ற இடங்களில் அடை யாள அட்டை வழங்கிடவும் முன் தொகை செலுத்துவ தில் இருந்து விலக்கு அளித்து வணிக வளாகங்களில் 5 சத வீத இட ஒதுக்கீடு மாற்றத் திற னாளிகளுக்கு வழங்கிட வேண்டும். பொது இடங்க ளில் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கட்டண கழிப்பறை, வாகனம் நிறுத்துமிடம் ஆகி யவற்றினை குத்தகைக்கு விடும்போது மாற்றுத்திற னாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்க வேண்டும் என்ற உத் தரவின்படி மாற்றுத்திற னாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்பு உரிமை களுக்கான சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பி.வீர மணி தலைமையில் புத னன்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்கிடம் மனு அளிக்கப்பட் டது. இதில் மாவட்டச் செய லாளர் ஆ. பாலமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் டி. குமரவேல், வை.ஜெனியம் மாள் மற்றும் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி. ஜோதிபாசு ஆகியோர் உட னிருந்தனர்.