திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மல்லி.கு.ஆறுமுகம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பாண்டி முன்னிலை வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வி. சிவகுமார், வட்டார வளர்ச்சி ஆணையாளர் அ.சிவ குமார் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் .விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.