திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமப்புறத்தில் தங்கியிருந்து விவசாயப் பெருமக்களுக்கு தொழில்நுட்ப செயல்விளக்கம் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அரசு நடுநிலைப் பள்ளி, காமாட்சிபுரம் கிராமத்தில் மாணவர்களுக்கு ‘ஊட்டச்சத்துத் தோட்டம்’ பற்றிய விளக்கக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரிi ஜாக்குலின் மேரி தலைமை வகித்தார். தோட்டக்கலை கல்லூரி பன்னீர்செல்வம் வரவேற்றார். காமாட்சிபுரம் ஊராட்சி தலைவர் கணேஷ்பிரபு, துணைத்தலைவர் வைரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.