தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு செய்ததை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் வெள்ளிகண்ணு, மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையற்றினர்.