இராஜபாளையம், ஜன.5- இராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டியை அடுத்த ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (30). இவர் 100 சதவீதம் நடக்க முடியாத தவழும் மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு மாற்றுத்திறனாளிக்கான உத வித்தொகை பெறும் வங்கி கணக்கு ரயில்வே பீடர் சாலை யில் உள்ள பொதுத்துறை வங்கி கிளையில் இருக்கிறது. இவரது வங்கி கணக்கு முடக் கப்பட்டதால், அதை செயல் படுத்த தனது உதவியாளரி டம் கடிதம் கொடுத்து அனுப் பினார். அதற்கு வங்கி அதி காரி கணக்கு வைத்துள்ளவர் நேரில் வரவேண்டும் என கூறி யுள்ளார். இந்நிலையில் நேற்று வங்கி கிளைக்கு வந்த அன்ன பூரணி, மாடியில் உள்ள அலு வலகத்திற்கு மாற்றுத்திற னாளிகள் செல்லும் வசதி இல்லாததால் தன்னால் வர இயலாது என கூறியுள்ளார். ஆனால் வங்கி ஊழியர் அன்னபூரணியை மேலே நேரில் வருமாறு கூறியுள் ளார். இதையடுத்து மாற்றுத் திறனாளியை நேரில் வர வற்புறுத்திய வங்கி அதிகாரி யை கண்டித்தும், அலுவல கத்தில் மாற்றுத்திறனாளி கள் செல்வதற்கான வசதி கள் ஏற்படுத்த வலியுறுத்தி யும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார் பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அண்ணா பூரணியின் வங்கி கணக்கை செயல்படுத்துவதற்கான கடி தத்தை நேரில் வந்து பெற்று சென்றனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.